Svr.pamini

Tuesday, April 17, 2012

நாம் இந்தியர்.

நம் நாட்டு அரசியலை , மாறிமாறி விமர்சிக்கும் நம் நண்பர்களே!நம்மை நாமே இழிவு படுத்தி கொள்ளாவிட்டால், வேலை இல்லாதவர் ஆகிவிடுவோம் என்ற கடைமைக்காகவே கடைமையை செய்யும் அன்பர்களே! உங்கள் கடைமை உணர்வுக்கு என் வாழ்த்துகள்.

இந்தியாவில் பிறந்தமையால் நீங்கள் இந்திய குடிமக்கள்,
ஆண்டுக்கொரு முறை அரசுக்கு வரி கொடுத்தமையால், எல்லாவற்றையும் விமர்சிக்க,குறைகூற உரிமம் பெற்று விட்டீர். ஆனால் சிந்திக்கவும் திறனற்று அடுத்தவர் வழிகாட்டலுக்கு ஆட்டு மந்தை ஆணீர்.குறை கூறவும், தவறை தட்டிகேட்கவும் உரிமை உண்டு. நீங்கள் தவறு செய்யா தவறாய் இருப்பின்.

அரசியல் வாதி மட்டும் தான் ஊழல் வாதியா? நாம் நம் கடைமையை சரியாக செய்கிறோமா? நாம் நம் தேவைக்கு லஞ்சம் கொடுக்கலாம், வாங்கவும் செய்யலாம் தவறில்லை ? நாம் தேவைக்கு ஊழலை ஊக்குவிக்கும் நாம் மற்றவரை விமர்சிக்க  தகுதி உள்ளவரா? 

தமிழ் நாட்டில் இரண்டு அரசியல் கட்சிகளும் மாறிமாறி இலவசங்களை
வழங்கி மக்களை சோம்பேறி யாக்கிய போதும், அந்த இலவசங்கள் உங்கள் வீட்டின் முன் வந்தபோதும் அதை புறக்கணித்தவர் எத்தனை பேர் ?எங்களுக்கு இலவசம் வேண்டாம் நிரந்தர வேலை வாய்ப்பை  கொடு என்று கேட்டவர் எத்தனை பேர்?

பஸ் கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு என்று கூச்சலிட நமக்கு என்ன தகுதி இருக்கிறது ?


இன்று தமிழ் நாட்டில் வாக்காளரை விட அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை  அதிகம். இதற்க்கு காரணம் நம்மில் பலர் காரணம் தெரியாமலேயே அரசியல் தலைவர்களின் கொள்கைக்கு சுவரொட்டியாக இருப்பதுதான்.

சாதி, இன உணர்வை தூண்டி அரசியல் நடத்தும் இவர்களின்  நோக்கம் மக்களுக்கு நல்லது செய்வதா? எங்களுக்கு பதவியாசையல்லாம் இல்லை தமிழ் இன மக்களுக்கு தொண்டு செய்வதுதான் எங்கள் நோக்கம் என்றால்..... அதற்க்கு அரசியல் கட்சி எதற்கு? கொள்கை,கூட்டணி கட்சி , தொகுதி பங்கீடு இவற்றை துறந்து மக்கள் விழிப்புணர்வு இயக்கம் நடத்தலாமே?

தமிழனை ஏய்ப்பது யார் ? இவர்கள் கூற்றின் படி சீக்கியன் மட்டும்தானா? தமிழ் நாட்டில் தமிழனை இன்னொரு தமிழன் ஏய்க்க வில்லையா? இன்னொரு தமிழன் கொள்ளையிட வில்லையா? பிறகு எதற்கு உங்கள் துப்பு கேட்ட இனவெறி கொள்கை?

தமிழ் நாட்டில் சாதியை ஒழிப்பது யார்? அரசின் நலதிட்டத்தை பெற நாமே வருசையில் நின்று நான் தாழ்த்த பட்டவன் என்று  சான்றிதழ் கேட்க்கும் நம்மில் இன்னும் இருநூறு அம்பேத்கர் வந்தாலும் சாதி ஒழியாது.

தமிழனை இந்தியரிடம் இருந்து பிரிக்கும் படலம் இனியாவது ஒழியட்டும்.
மனித நேயம் கொண்டு தமிழனாய் மனிதனாய் மக்கள் அனைவரையும் நேசிப்போம்.
நிறத்தால் மொழியால் வேறுபட்டாலும்  நாம் இந்தியர் என்ற  உணர்வோடு நாட்டை நேசிப்போம்

                                                                                           JAI HIND . 







 

Sunday, April 8, 2012

பேஸ் புக் ஐ பழைய தோற்றத்திற்கு மாற்ற.

உலகில் பெரும் பாலோரால் பயன்படுத்தப்படும் முதன்மை 
 வலை தளம் பேஸ் புக்  பயனீட்டாளர்களின் ப்ரோபில் பக்கத்திற்கு
 TIME LINE என்னும் புதிய வடிவத்தை அறிமுகம் செய்தது.
இந்த புதிய தோற்றம் சிலருக்கு பிடித்தும் பிடிக்காமலும் உள்ளது.
 இந்த TIMELINE தோற்றம் பிடித்ததோ இல்லையோ  அனைவரும்
பயன்படுத்தியே தீர வேண்டும் என திணித்தது இந்த வலைத்தளம்.

800 மில்லயன் வாசகர்களை கொண்ட இந்த முதன்மை தளம்
இவ்வாறு செய்தது பலருக்கும் அதிருப்பியை தந்தது .
இருந்தாலும் சிலர் வேறு வழி இல்லாமல் இந்த TIMELINE
வசதியை பயன்படுத்தி வருகின்றனர்.

உங்களுக்கு இந்த TIMELINE தோற்றம் பிடிக்க வில்லையா?
இதை பழைய தோற்றத்திற்கு மாற்ற விரும்புகிறீர்களா?

ஆம் என்றால் கீழே உள்ள வழி முறைகளை  பின்பற்றுங்கள்.
முதலில் timeline removeinஇந்த லிங்க் கிளிக் செய்து இந்த
தளத்தை ஓபன் செய்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு கீழே இருப்பது போல் விண்டோ  வரும்
பயர் பாக்ஸ் ,மற்றும்  குரோம்  உலவியை பயன் படுத்துவோர்
அதற்க்கான லோகோவை கிளிக் செய்து அந்த நீட்சியை
உங்கள்  பிரௌசரில் இணைத்து கொள்ளுங்கள்.
(safari பயன்படுத்துவோருக்கான நீட்சி விரைவில் பயன் பாட்டுக்கு வரும்

இந்த நீட்சி உங்கள் பிரௌசரில் இன்ஸ்டால் ஆனவுடன்
பேஸ் புக் பக்கத்தை திறந்து பாருங்கள்.timeline வசதி
மறைந்து பழைய தோற்றத்தை காண்பீர்கள்.

இனி உங்களுக்கு பிடித்த தோற்றத்தில் பேஸ் புக் பயன்படுத்தலாம்.

(பி .கு )
            இந்த நீட்சியை un install செய்வதன் மூலம் எந்த நேரமும்
timeline தோற்றத்திற்கு மாறலாம்.


                                                                                                        thanks jaffna anton

இணைய தளங்களில் தமிழில் எழுதுவது எப்படி?

1. இந்த சுட்டிக்கு போங்க  கீழே இருப்பது போல் இருக்கும் . 


2. CHOOSE YOUR IME LANGUAGE ல TAMIL ல தேர்வு செய்யுங்க
பிறகு download google IME அ கிளிக் பண்ணுங்க

3.googletamilinputsetup.exe  dwonload ஆகும்.
download ஆன exefile open பண்ணி  இன்ஸ்டால் பண்ணுங்க.

4. பிறகு instaalation.



5. இவ்வாறு வரும் அவ்வளவுதான் .இதுல ''அ '' பட்டனை கிளிக்
பண்ண மொழி மாறும் .

******இதன் பிறகு (A/I+SHIFT)அழுத்த மொழி மாற்றலாம்.

(பின் குறிப்பு) இதற்க்கு FIREFOX,GOOGLE BROWSER தேவை

அல்லது நேரடியாக எழுத முகவரி










 

Friday, April 6, 2012

இணையம் இல்லாமல் பேஸ் புக் பயன்படுத்தலாம்

இனி இணைய வசதி இல்லாமலேயே கைபேசி மூலம் பேஸ் புக் இல் வலம் வரலாம்.இந்த வசதியை பேஸ் புக் இந்தியாவும், போனிடுவிஷ், இணைந்து தருகிறது.இண்டர்நெட் வசதி இல்லாத எந்த ஒரு சாதாரண கை பேசியிலும்,இந்த வசதியை பயன் படுத்தி கொள்ளலாம் என்பது கூடுதல் சிறப்பு.
ஆனால் இந்த வசதி தற்போது ஏர்செல்,ஏர்டெல் ஐடியா,மற்றும் டாடா டோகொமோ,ஆகிய மொபைல் சேவையை பயன்படுத்தும் இந்திய பயன்பாட்டாளர் மட்டுமே பயன் படுத்த முடியும்.

இந்த சேவையைபெற *325 # டயல் செய்தவுடன் உங்கள் பேஸ் புக் பயனாளர் சொல்லையும்,கடவு சொல்லையும் உள்ளிட்டு,பின்பு ஆன்லைன் இல் உள்ள நண்பர்களுடன் அரட்டை அடிக்கலாம்,புதிய நண்பர்களையும் செர்த்துகோள்ளலாம்.இதற்க்கு நீங்கள் எந்த ஒரு அப்ளிகேசனையும் பதிவிறக்கம் செய்ய தேவை இல்லை.இதற்காக நிர்ணயிக்க பட்ட தொகை ஒரு நாளைக்கு ஒரு ரூபாய் மட்டுமே.பயன்படுத்தும் அளவுக்கு வரம்பு கிடையாது.கட்டணம் மிக குறைவு என்பதால் பயனீட்டாளர்ருக்கு கொண்டாடமே.

Sunday, April 3, 2011

இந்தியாவின் தொடரும் மற்றொரு சாதனை

கிரிகெட் உலகில் 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய உலக கோப்பை கைபற்றி சாதனை படைத்தது. ஒட்டுமொத்த இந்தியாவையும் மகிட்சி கடலில் ஆழ்த்திய எமது வீரர்களுக்கு நன்றி .இத்தொடரில் இந்திய சந்தித்த ஒவ்வொரு போட்டியும் ரசிகர்களுக்கு விருந்தே !குறிப்பாக 12 ஆண்டுகள் கிரிகெட் உலகில் முடிசூட மன்னன், கடந்த 2003 இல் எம்மை இறுதி போட்டியில் வீழ்த்திய ஆஸ்திரேலிய அணியை கால் இறுதி ஆட்டத்தில் வீழ்த்திய எமது வீரர்களின் திறமைக்கு குறிப்பாக (யுவராஜ் ) ஒரு சல்யுட் . இந்தியாவை பொறுத்த வரையில் இறுதி போட்டியை விட பாகிஸ்தானுடன் மோதிய அரை இருத்தியே அனைவரும் எதிர்பார்த்த ஒரு போட்டியாகும் . வாகன நெரிசலில் சிக்கித்தவிக்கும் சென்னை நகர சாலைகள் வெறிச்சோடி கிடக்க இந்திய முழுவதும் மக்கள் தொலைகாட்சி முன் இருக்க இந்தியாவின் எராளமான தலைவர்கள் முஹலி அரங்கில் சங்கமித்து இருந்தனர் என்றால் அது மிகையாகாது . இத்தொடர் முழுதும் சிறப்பாக விளையாடிய பாகிஸ்தான் அணி , இந்தியாவிடம் அடிபணிய கரணம் எங்கள் அனுபவம் மிக்க திறமையான வீரர்களின் ( சச்சின் ) திறமைக்கு முன்னால் இவர்களின் திறன் எடுபடாமல் போனதே ! பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய , இறுதி போட்டியில் இலங்கையை எதிர்கொள்ள, ஏறதாழ இந்தியாவின் வெற்றி உறுதியானது பலமிக்க இந்திய அணிக்கு இவர்கள் நிர்ணயத இலக்கு 274 . பலமான எங்கள் அணிக்கு இது எளிதான இலக்கு என்றாலும் . ஆரம்பத்தில் அவர்கள் சாய்த்த இரண்டு விக்கெட் ( சச்சின் , சேவக் ) வெற்றி இலங்கை பக்கம் சிறிது சாய்ந்தது . ஏனைய வீரர்களின்(கம்பீர் , கோலி, தோணி , யுவராஜ் ) திறமையான ஆட்டத்தல் இந்திய சாதனை படைக்க அரங்கமே ஆனந்த கண்ணீரில் நனைத்தது .இத்தொடர் முழுதும் சிறப்பாக விளையாடிய சச்சின் இன்னும் பாத்து ஆண்டுகள் ,அணியில் இன்னும் பல சாதனை படைக்க வேண்டும் , என்பதே என்னை போன்ற ஏனையோரின் ஆவல் , எதற்கு யாம் இறைவனை பிராத்திப்போம் , இந்திய இன்னும் பல சாதனை படைக்க வாழ்த்துவோம் . i love my india

Wednesday, December 8, 2010

இவர்களே இந்தியாவின் சாபக்கேடு

எமது அரசியல் வாதிகளுக்கு அவ்வப்போது அறிக்கை விடுவதற்கு ஈழ தமிழர் பிரச்னை இல்லை என்றாகிவிட்டது இப்போது காஹ்மீரை கையில் எடுத்துகொன்டனர் . மாநில சுகாதாரம் மற்றும் தோட்டக்கலைத்துறை அமைச்சரான ஷாம்லால் சர்மா, காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் பேசுகையி்ல்,காஷ்மீரை தனி நாடாக அறிவிக்க வேண்டும். அதே நேரத்தில் ஜம்முவை தனி மாநிலமாகவும் லடாக் பகுதியை யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும். இதை செய்வது தான் காஷ்மீருக்கும் மக்களுக்கும் நல்லது என்றார்.இது பெரும் சர்ச்சையை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது .இதுபோன்று எதாவது அவ்வபோது பேசாவிட்டால் இவர்கள் இருப்பது மக்களுக்கு தெரியாமல் போய்விடும்.ஊர் ரெண்டுபட்டால் கூத்தடிக்கு கொண்டாட்டம் . இவர்கள் பேச எதாவது ஒரு பிரச்னை தேவை ,அது கிடைக்காவிட்டால் இவர்களே உருவாக்கிவிடுவார்கள். டெல்லியில் சமீபத்தில் நடந்த கருத்தரங்கில். இந்தியாவின் பிரபல எழுத்தாளர்களில் ஒருவரான அருந்ததி ராய்,காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக எப்போதும் இருந்ததில்லை. இது வரலாற்று உண்மை. ஆகவே காஹ்மீரை பாகிஸ்தானிடம் ஒப்படைத்து விடலாம் என்று பேசாமல் பேசியிருந்தார்.சட்டம் தன் கடமையை செய்யும் .இது ஒருபுறம் இருக்க ....நமது அரசியல் வாதிகளுக்கு சொல்லவாவேண்டும் .காஷ்மீர் விவகாரத்தில் அருந்ததி ராய் பேசியதில் எந்தக் குற்றமும் இல்லை என்று நமது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஷ்மீர் விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை தெரிவித்த உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் அருந்ததி ராயின் குரலை நெறிக்க முயற்சி செய்யும் மத்திய அரசின் செயல்பாட்டை வன்மையாக கண்டிக்கிறோம்.மேலும் ,காஷ்மீர் மக்கள் விடுதலையை விரும்புகின்றனர் என்பது எல்லாரும் அறிந்த உண்மை.அங்கு 2 இஸ்லாமிய பெண்கள் கற்பழிக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு பிறகுதான் அவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.என்றும் ,மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் காஷ்மீருக்கு சென்ற அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவில் நானும் இடம் பெற்று, காஷ்மீரின் நிலைமையை நேரில் கண்டறிந்தேன்.`இந்திய ஆதிக்கத்தில் இருந்து சுதந்திரம் பெற வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம்' என்று அங்குள்ள மக்களில் பெரும்பாலானோர் எங்களிடம் வெளிப்படையாகவே தெரிவித்தனர்.என்று கூறியுள்ளார் .காஷ்மீர் மக்கள் பெரும்பாலானோர் அமைதியாக வாழவே விரும்புகின்றனர் ,ஒருசில பிரிவினைவாத (தீவிரவாத )இயக்கங்கள் மட்டுமே அமைதியை சீர்குலைத்து வருகின்றனர் என்பதுதான் உண்மை ,அமைதியை சீர்குலைப்பது அவர்கள் மட்டும் தான?திருமாவளவன் போன்ற அரசியல்வாதிகளுக்கே அதிக பங்கு.

இது ஒருபுறம் என்றல் , மதத்தின் பெயரால் எங்கள் அமைதியை கெடுக்கும் அன்னியரின் பங்கு இன்னொருபுறம் .
(காஷ்மீர் போராட்டத்தை ஆதரியுங்கள்-முஸ்லீம்களுக்கு ஈரான் மதத் தலைவர் அழைப்பு)

உலகெங்கும் உள்ள முஸ்லீம் அறிஞர்கள், காஷ்மீரில் நடந்து வரும் போராட்டத்திற்கு தங்களால் ஆன உதவிகளைச் செய்ய வேண்டும் என ஈரான் நாட்டின் மதத் தலைவரான அயத்துல்லா அலி கமேனி கூறியுள்ளார்.மேலும் காஷ்மீரை தனி நாடு போலவும் அவர் வர்ணித்துள்ளார்.

எவரொருவரின் சூட்சியும் எங்கள் சகோதரதத்துவத்தின் முன் எடுபடாது

நாங்கள் இந்தியர் என்னும் வலிமையான சங்கிலியால் இணைக்கப்பட்டுள்ளோம் என்பதற்கு சமிபத்தில் வெளியான பாபர் மசூதி வழக்கின் இறுதி தீர்ப்பே சாட்சி .

Wednesday, October 27, 2010

சாதனை படைத்தது இந்தியா!

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா 38 தங்கம், 27 வெள்ளி, 36 வெண்கலத்துடன் மொத்தம் 101 பதக்கங்களைப் பெற்று பதக்கப் பட்டியலில் இரண்டாவது இடத்தையும் பிடித்திருக்கிறது.
இது ஒரு புறம் மகிட்சி என்றாலும் , போட்டி தொடங்கும் முன்பே
சர்ச்சைகள், சந்தேகங்கள்,தொடங்கிவிட்டன .


விளையாட்டு அரங்கங்கள் தயாராகவில்லை, தயாரானவையும் நல்ல தரத்தில் இல்லை; விளையாட்டு கிராமத்தைச் சுற்றி மழை நீர் தேங்கி நிற்கிறது; கொசுக்கடி தாளவில்லை; நடைமேம்பாலம் இடிந்து விழுந்துவிட்டது; விளையாட்டு அரங்கின் மேற்கூரை பெயர்ந்து விழுந்துவிட்டது; விளையாட்டு வீரர்களுக்கான குடியிருப்பில் உள்ள கட்டில்களில் தெரு நாய்கள் படுத்து உறங்குகின்றன என்று ஏகப்பட்ட புகார்கள், இவ்வாறெல்லாம் இந்தியாவை வெளிவுலகிற்கு சிலர் அடையாளம் காண்பித்தாலும் ,நம்முடைய விளையாட்டு வீரர்களின் திறமையையும் , பாராட்டாமல் இருக்கவே முடியாது.

என்னை பொறுத்தவரை
இந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் என்பது
இந்தியாவிற்கு சிறப்பான வெற்றி ......
குறுகிய காலத்தில் சர்வதேச தரத்தில் விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் ஆற்றல் இந்தியாவுக்கு இருக்கிறது என்பது உணர்த்தப்பட்டிருக்கிறது என்றால்மகிழ்சி.... இது ஒரு புறம் இருக்க ,இந்தப் போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கலம் வாங்கிக் குவிக்கும் திறமை நம்முடைய வீரர்களுக்கு இருக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
2003-ல் காமன்வெல்த் போட்டியை தில்லியில் நடத்த சம்மதம் தெரிவித்த பிறகும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டிய அமைச்சரவைக் குழு 2008 வரை உறக்கத்தில் இருந்தது வருந்ததக்கது .......

எதிர் காலத்தில் எதனை தவிர்த்தால் எம்மை இவ்வுலகம் திரும்பிபார்க்கும்
என்பதில் ஐயம் இல்லை .