Svr.pamini

Sunday, April 3, 2011

இந்தியாவின் தொடரும் மற்றொரு சாதனை

கிரிகெட் உலகில் 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய உலக கோப்பை கைபற்றி சாதனை படைத்தது. ஒட்டுமொத்த இந்தியாவையும் மகிட்சி கடலில் ஆழ்த்திய எமது வீரர்களுக்கு நன்றி .இத்தொடரில் இந்திய சந்தித்த ஒவ்வொரு போட்டியும் ரசிகர்களுக்கு விருந்தே !குறிப்பாக 12 ஆண்டுகள் கிரிகெட் உலகில் முடிசூட மன்னன், கடந்த 2003 இல் எம்மை இறுதி போட்டியில் வீழ்த்திய ஆஸ்திரேலிய அணியை கால் இறுதி ஆட்டத்தில் வீழ்த்திய எமது வீரர்களின் திறமைக்கு குறிப்பாக (யுவராஜ் ) ஒரு சல்யுட் . இந்தியாவை பொறுத்த வரையில் இறுதி போட்டியை விட பாகிஸ்தானுடன் மோதிய அரை இருத்தியே அனைவரும் எதிர்பார்த்த ஒரு போட்டியாகும் . வாகன நெரிசலில் சிக்கித்தவிக்கும் சென்னை நகர சாலைகள் வெறிச்சோடி கிடக்க இந்திய முழுவதும் மக்கள் தொலைகாட்சி முன் இருக்க இந்தியாவின் எராளமான தலைவர்கள் முஹலி அரங்கில் சங்கமித்து இருந்தனர் என்றால் அது மிகையாகாது . இத்தொடர் முழுதும் சிறப்பாக விளையாடிய பாகிஸ்தான் அணி , இந்தியாவிடம் அடிபணிய கரணம் எங்கள் அனுபவம் மிக்க திறமையான வீரர்களின் ( சச்சின் ) திறமைக்கு முன்னால் இவர்களின் திறன் எடுபடாமல் போனதே ! பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய , இறுதி போட்டியில் இலங்கையை எதிர்கொள்ள, ஏறதாழ இந்தியாவின் வெற்றி உறுதியானது பலமிக்க இந்திய அணிக்கு இவர்கள் நிர்ணயத இலக்கு 274 . பலமான எங்கள் அணிக்கு இது எளிதான இலக்கு என்றாலும் . ஆரம்பத்தில் அவர்கள் சாய்த்த இரண்டு விக்கெட் ( சச்சின் , சேவக் ) வெற்றி இலங்கை பக்கம் சிறிது சாய்ந்தது . ஏனைய வீரர்களின்(கம்பீர் , கோலி, தோணி , யுவராஜ் ) திறமையான ஆட்டத்தல் இந்திய சாதனை படைக்க அரங்கமே ஆனந்த கண்ணீரில் நனைத்தது .இத்தொடர் முழுதும் சிறப்பாக விளையாடிய சச்சின் இன்னும் பாத்து ஆண்டுகள் ,அணியில் இன்னும் பல சாதனை படைக்க வேண்டும் , என்பதே என்னை போன்ற ஏனையோரின் ஆவல் , எதற்கு யாம் இறைவனை பிராத்திப்போம் , இந்திய இன்னும் பல சாதனை படைக்க வாழ்த்துவோம் . i love my india

No comments:

Post a Comment