Svr.pamini

Tuesday, April 17, 2012

நாம் இந்தியர்.

நம் நாட்டு அரசியலை , மாறிமாறி விமர்சிக்கும் நம் நண்பர்களே!நம்மை நாமே இழிவு படுத்தி கொள்ளாவிட்டால், வேலை இல்லாதவர் ஆகிவிடுவோம் என்ற கடைமைக்காகவே கடைமையை செய்யும் அன்பர்களே! உங்கள் கடைமை உணர்வுக்கு என் வாழ்த்துகள்.

இந்தியாவில் பிறந்தமையால் நீங்கள் இந்திய குடிமக்கள்,
ஆண்டுக்கொரு முறை அரசுக்கு வரி கொடுத்தமையால், எல்லாவற்றையும் விமர்சிக்க,குறைகூற உரிமம் பெற்று விட்டீர். ஆனால் சிந்திக்கவும் திறனற்று அடுத்தவர் வழிகாட்டலுக்கு ஆட்டு மந்தை ஆணீர்.குறை கூறவும், தவறை தட்டிகேட்கவும் உரிமை உண்டு. நீங்கள் தவறு செய்யா தவறாய் இருப்பின்.

அரசியல் வாதி மட்டும் தான் ஊழல் வாதியா? நாம் நம் கடைமையை சரியாக செய்கிறோமா? நாம் நம் தேவைக்கு லஞ்சம் கொடுக்கலாம், வாங்கவும் செய்யலாம் தவறில்லை ? நாம் தேவைக்கு ஊழலை ஊக்குவிக்கும் நாம் மற்றவரை விமர்சிக்க  தகுதி உள்ளவரா? 

தமிழ் நாட்டில் இரண்டு அரசியல் கட்சிகளும் மாறிமாறி இலவசங்களை
வழங்கி மக்களை சோம்பேறி யாக்கிய போதும், அந்த இலவசங்கள் உங்கள் வீட்டின் முன் வந்தபோதும் அதை புறக்கணித்தவர் எத்தனை பேர் ?எங்களுக்கு இலவசம் வேண்டாம் நிரந்தர வேலை வாய்ப்பை  கொடு என்று கேட்டவர் எத்தனை பேர்?

பஸ் கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு என்று கூச்சலிட நமக்கு என்ன தகுதி இருக்கிறது ?


இன்று தமிழ் நாட்டில் வாக்காளரை விட அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை  அதிகம். இதற்க்கு காரணம் நம்மில் பலர் காரணம் தெரியாமலேயே அரசியல் தலைவர்களின் கொள்கைக்கு சுவரொட்டியாக இருப்பதுதான்.

சாதி, இன உணர்வை தூண்டி அரசியல் நடத்தும் இவர்களின்  நோக்கம் மக்களுக்கு நல்லது செய்வதா? எங்களுக்கு பதவியாசையல்லாம் இல்லை தமிழ் இன மக்களுக்கு தொண்டு செய்வதுதான் எங்கள் நோக்கம் என்றால்..... அதற்க்கு அரசியல் கட்சி எதற்கு? கொள்கை,கூட்டணி கட்சி , தொகுதி பங்கீடு இவற்றை துறந்து மக்கள் விழிப்புணர்வு இயக்கம் நடத்தலாமே?

தமிழனை ஏய்ப்பது யார் ? இவர்கள் கூற்றின் படி சீக்கியன் மட்டும்தானா? தமிழ் நாட்டில் தமிழனை இன்னொரு தமிழன் ஏய்க்க வில்லையா? இன்னொரு தமிழன் கொள்ளையிட வில்லையா? பிறகு எதற்கு உங்கள் துப்பு கேட்ட இனவெறி கொள்கை?

தமிழ் நாட்டில் சாதியை ஒழிப்பது யார்? அரசின் நலதிட்டத்தை பெற நாமே வருசையில் நின்று நான் தாழ்த்த பட்டவன் என்று  சான்றிதழ் கேட்க்கும் நம்மில் இன்னும் இருநூறு அம்பேத்கர் வந்தாலும் சாதி ஒழியாது.

தமிழனை இந்தியரிடம் இருந்து பிரிக்கும் படலம் இனியாவது ஒழியட்டும்.
மனித நேயம் கொண்டு தமிழனாய் மனிதனாய் மக்கள் அனைவரையும் நேசிப்போம்.
நிறத்தால் மொழியால் வேறுபட்டாலும்  நாம் இந்தியர் என்ற  உணர்வோடு நாட்டை நேசிப்போம்

                                                                                           JAI HIND . 







 

Sunday, April 8, 2012

பேஸ் புக் ஐ பழைய தோற்றத்திற்கு மாற்ற.

உலகில் பெரும் பாலோரால் பயன்படுத்தப்படும் முதன்மை 
 வலை தளம் பேஸ் புக்  பயனீட்டாளர்களின் ப்ரோபில் பக்கத்திற்கு
 TIME LINE என்னும் புதிய வடிவத்தை அறிமுகம் செய்தது.
இந்த புதிய தோற்றம் சிலருக்கு பிடித்தும் பிடிக்காமலும் உள்ளது.
 இந்த TIMELINE தோற்றம் பிடித்ததோ இல்லையோ  அனைவரும்
பயன்படுத்தியே தீர வேண்டும் என திணித்தது இந்த வலைத்தளம்.

800 மில்லயன் வாசகர்களை கொண்ட இந்த முதன்மை தளம்
இவ்வாறு செய்தது பலருக்கும் அதிருப்பியை தந்தது .
இருந்தாலும் சிலர் வேறு வழி இல்லாமல் இந்த TIMELINE
வசதியை பயன்படுத்தி வருகின்றனர்.

உங்களுக்கு இந்த TIMELINE தோற்றம் பிடிக்க வில்லையா?
இதை பழைய தோற்றத்திற்கு மாற்ற விரும்புகிறீர்களா?

ஆம் என்றால் கீழே உள்ள வழி முறைகளை  பின்பற்றுங்கள்.
முதலில் timeline removeinஇந்த லிங்க் கிளிக் செய்து இந்த
தளத்தை ஓபன் செய்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு கீழே இருப்பது போல் விண்டோ  வரும்
பயர் பாக்ஸ் ,மற்றும்  குரோம்  உலவியை பயன் படுத்துவோர்
அதற்க்கான லோகோவை கிளிக் செய்து அந்த நீட்சியை
உங்கள்  பிரௌசரில் இணைத்து கொள்ளுங்கள்.
(safari பயன்படுத்துவோருக்கான நீட்சி விரைவில் பயன் பாட்டுக்கு வரும்

இந்த நீட்சி உங்கள் பிரௌசரில் இன்ஸ்டால் ஆனவுடன்
பேஸ் புக் பக்கத்தை திறந்து பாருங்கள்.timeline வசதி
மறைந்து பழைய தோற்றத்தை காண்பீர்கள்.

இனி உங்களுக்கு பிடித்த தோற்றத்தில் பேஸ் புக் பயன்படுத்தலாம்.

(பி .கு )
            இந்த நீட்சியை un install செய்வதன் மூலம் எந்த நேரமும்
timeline தோற்றத்திற்கு மாறலாம்.


                                                                                                        thanks jaffna anton

இணைய தளங்களில் தமிழில் எழுதுவது எப்படி?

1. இந்த சுட்டிக்கு போங்க  கீழே இருப்பது போல் இருக்கும் . 


2. CHOOSE YOUR IME LANGUAGE ல TAMIL ல தேர்வு செய்யுங்க
பிறகு download google IME அ கிளிக் பண்ணுங்க

3.googletamilinputsetup.exe  dwonload ஆகும்.
download ஆன exefile open பண்ணி  இன்ஸ்டால் பண்ணுங்க.

4. பிறகு instaalation.



5. இவ்வாறு வரும் அவ்வளவுதான் .இதுல ''அ '' பட்டனை கிளிக்
பண்ண மொழி மாறும் .

******இதன் பிறகு (A/I+SHIFT)அழுத்த மொழி மாற்றலாம்.

(பின் குறிப்பு) இதற்க்கு FIREFOX,GOOGLE BROWSER தேவை

அல்லது நேரடியாக எழுத முகவரி










 

Friday, April 6, 2012

இணையம் இல்லாமல் பேஸ் புக் பயன்படுத்தலாம்

இனி இணைய வசதி இல்லாமலேயே கைபேசி மூலம் பேஸ் புக் இல் வலம் வரலாம்.இந்த வசதியை பேஸ் புக் இந்தியாவும், போனிடுவிஷ், இணைந்து தருகிறது.இண்டர்நெட் வசதி இல்லாத எந்த ஒரு சாதாரண கை பேசியிலும்,இந்த வசதியை பயன் படுத்தி கொள்ளலாம் என்பது கூடுதல் சிறப்பு.
ஆனால் இந்த வசதி தற்போது ஏர்செல்,ஏர்டெல் ஐடியா,மற்றும் டாடா டோகொமோ,ஆகிய மொபைல் சேவையை பயன்படுத்தும் இந்திய பயன்பாட்டாளர் மட்டுமே பயன் படுத்த முடியும்.

இந்த சேவையைபெற *325 # டயல் செய்தவுடன் உங்கள் பேஸ் புக் பயனாளர் சொல்லையும்,கடவு சொல்லையும் உள்ளிட்டு,பின்பு ஆன்லைன் இல் உள்ள நண்பர்களுடன் அரட்டை அடிக்கலாம்,புதிய நண்பர்களையும் செர்த்துகோள்ளலாம்.இதற்க்கு நீங்கள் எந்த ஒரு அப்ளிகேசனையும் பதிவிறக்கம் செய்ய தேவை இல்லை.இதற்காக நிர்ணயிக்க பட்ட தொகை ஒரு நாளைக்கு ஒரு ரூபாய் மட்டுமே.பயன்படுத்தும் அளவுக்கு வரம்பு கிடையாது.கட்டணம் மிக குறைவு என்பதால் பயனீட்டாளர்ருக்கு கொண்டாடமே.